அரும்பின் குறும்பு..
கருகொண்ட தருணம் முதல்
தொடங்கியதே பயணம்...
பாவாடை கட்டும் தருணமோ
இறுக்கி கட்டினால் வழிக்குமோ
என்று அஞ்சும் மனது..
அசைபோட்டு நகர்ந்த
மகப்பேறு மாதங்கள்..
ஆனந்ததின் எல்லை..
உச்சி முதல் பாதம் வரை
வலி உணர்ந்தேன்..
நீ வர போகும் தருணம்...
அழு குரல் எழும்பியதல்
வசந்தம் இல்லத்தில் மலர்ந்ததே..
பிடித்ததை சாப்பிட மறுத்தேன்...
உனக்கு சளி பிடிக்குமென்று..
ஆசையாய் வளர்ந்த கூந்தல்..
அதை குளியாட்ட யோசித்தேன்..
உனக்கு இருமல் வருமென்று..
சாப்பிடும் போது மலம் கழித்தாய்..
சுத்தம் செய்துவிட்டு மறுபடி சாப்பிடுவேனே அன்பே..
என் இதயம் பரிசளித்த பட்டுபுடவையில் சிறுநீர் அபிஷேகம் செய்தாய்..
இரசித்து கொண்டே
துவைத்தேனே கண்ணே..
குளியலறையில் ஆயிரக்கணக்கில் போர் புரிந்தோமடா..
அழகாய் உன்னை வர்ணித்து கொஞ்சுவேன் நாளும்..
சிலையாய் சிங்காரமாய்
அலங்கரிப்பேனே உன்னை..
பதிலுக்கு..
உன் அப்பாவிற்கு முத்தமிட்டு.
கேளியாய் என்னை பார்ப்பாயே..
அரும்பின் குறும்பு
என்றும் சுகமே..